Wednesday, April 30, 2008

பிரிந்த காதல்


பிரிந்த காதல்




ஆண்டாறுகள் தினமும்
வண்டுபோல சுற்றி சுற்றி வந்து
உன் இதயத்தை துளைத்த
சின்ன தேவதை இவளை

அன்பாக அரவணைத்து
மென்மையாக முத்தம் தந்து
தோளில் தலைசாய விட்டு
கையில் மருதாணி போட்டு

பெண்ணிவளை அழகுபடுத்தி
கண்களை சிமிட்டி ரசித்து
பன்னிரண்டு பற்கள் தெரிய சிரித்து
கன்னங்களை தொட்டுக் கிள்ளி

அனுதினமும் அலுப்பின்றி
அணுவணுவாக காதல்செய்த
நீயா என்மீது சந்தேகம் கொண்டு
நாயே பேயே என திட்டினாய்..

பிரிந்திடாமல் எந்நாளுமே
பிரியமோடு வாழ்வேன் உன்னோடு
என்றெண்ணிய என் பிரியாக்காதல்
இன்று பிரிந்தது உன்னால் காதலா.




வெண்ணிலா

No comments: