Wednesday, April 30, 2008

பிரிந்த காதல்


பிரிந்த காதல்




ஆண்டாறுகள் தினமும்
வண்டுபோல சுற்றி சுற்றி வந்து
உன் இதயத்தை துளைத்த
சின்ன தேவதை இவளை

அன்பாக அரவணைத்து
மென்மையாக முத்தம் தந்து
தோளில் தலைசாய விட்டு
கையில் மருதாணி போட்டு

பெண்ணிவளை அழகுபடுத்தி
கண்களை சிமிட்டி ரசித்து
பன்னிரண்டு பற்கள் தெரிய சிரித்து
கன்னங்களை தொட்டுக் கிள்ளி

அனுதினமும் அலுப்பின்றி
அணுவணுவாக காதல்செய்த
நீயா என்மீது சந்தேகம் கொண்டு
நாயே பேயே என திட்டினாய்..

பிரிந்திடாமல் எந்நாளுமே
பிரியமோடு வாழ்வேன் உன்னோடு
என்றெண்ணிய என் பிரியாக்காதல்
இன்று பிரிந்தது உன்னால் காதலா.




வெண்ணிலா

Monday, April 28, 2008

தூக்கம் தவிர்த்திடுவோம்


பூண்டோம் இலட்சியப்பயணம்
பூத்துக் குலுங்குவது எங்கனம்
கண்ட கனவுகளோடு
கண்மூடித்தூங்கி விட்டோமா?

கண்டம் கண்டமாய்
கண்ணீரும் கம்பலையுமாய்-நாம்
துண்டங்களாகும் உறவுகளுக்காய்
துடித்தழுதும் உணரவில்லையா?

முண்டங்களாகி குவியும்-மனிதத்தை
முடிவுக்குக் கொணரல் எவ்வழி
சண்டையிலே இளைத்தவரா நாம்
சரணாகதி அடைவதற்கு

குண்டு போடும் வானூர்தியை-எம்
குடிலுக்குள் வர ஏன் விட்டோம்
துண்டுகளாக நொருக்கி விட முடியாமலா-இல்லை
தூங்கிவிட்டோம் கரம் இணைக்க

கொண்டு வந்த தென்ன-இக்
கொடுமை மிகு அகதி வாழ்வுக்காய்
நண்டு போல சுருங்கி வாழ்வதுதான்
நாகரீகமானதென்றால்-நம்தேச
வண்டினங்கள் கூட -எம்மை
வசைபாடித் திரியாதா?

பிண்டம் கொடுத்தொடு கிரிகை செய்தால்
பெற்றவர் கடன் தீருமா?
முண்டு கொடுத்து நிற்போம்
முழுமனதோடு ஈழத்தாய்க்காக

தண்டம் கேட்க வந்தோர்
தலையெல்லாம் சிதறுமென்று
உண்ட சோற்றின் மேல்
உறுதியிட்டு சங்கமிப்போம்
தலைத்தீவான்

Saturday, April 26, 2008

பிரியும் நேரம்

என் இனிய நண்பர்களுக்கு
மீண்டும் எப்போது எம்
இனிமையான சந்திப்பு
எனும் ஏக்கத்தோடு

என்றாவது எம் விலாசம்
தொலைந்து போகும் போது
எங்கிருந்தாவது நான் அழுவேன்
என் கண்ணீரால் கரையும்
உங்கள் இதயங்கள்

நீங்கள் இல்லாத என்
மனம் மீண்டும் பசுமைகளை
தேடிப்போகும் இனிமையான
அந்த நாட்களை எண்ணி

வாழ்க்கையில் பெரிய
ஆச்சர்யம் அன்பு
நிறைந்தவர்களை எப்போதாவது
எங்காவது சந்திக்க நேரிடும்

அதுபோல்

நம் சந்திப்பும் நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை.




சௌ.ரவீந்திரன்

காதலின் தப்பு


கண்மணி
உன் உத்தரவின்றி
உனககுள்...
ஊடுருவியது
என் தப்பு அல்ல...
அது காதலின் தப்பு
கண்மணியே...

கடலாக வந்த என்னை
நுரையாக எண்ணி...
கரையோரம்
தள்ளிவிடாய் ஏன் ...?

நான் உனக்குள்
உயிரான நினைவுகளோடு
என்றும் ரணங்களோடு
உயிர் ஊசலாடுகிறது
பிரவீன்

Wednesday, April 2, 2008

Best regards,

Tuesday, April 1, 2008

Track u r expenses.

Manage your expense online ! Free account.Access from home,office anywhere.Secure & SafeFree Budget Manager !

இதைக் கொஞ்சம் பாருங்களேன்..! www.ispendin.com






சமீமமாக ஒரு இணையதளத்தைக் கண்டேன்.

இந்த தளத்தில், நமது தின வரவு செலவுக் கணக்கை பதிவு செய்து வைக்கலாம்.

மாத முடிவில் , ஒவ்வொரு வகை (டேக்) லிம் செலவு செய்ததை காண்பித்து தருகிறது.

இதன் மூலம் நாம் எதில் அதிகம் அல்லது குறைவாக செலவு செய்துள்ளோம் என்பது தெரியவரும்.

நமது சொந்த மற்றும் வீட்டு செலவு கணக்கை பராமரிக்க சிறந்த எளிய வழி.

இதை நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும்....
எங்கும், எப்போதும் பயன்படுத்தலாம்.

மாணவர்களும், தனி நபர்களும்...இன்னும் யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்

நம் செலவை நாமே திட்டமி்ட்டுக் கொள்ளலாம்.

நமது சுய விபரங்கள், கணக்கு வழக்குகள் அதி ரகசியமாக பாதுகாக்கப் படுகிறது.

இந்த தளத்தில் இலவசமாக நமது கண்க்கை உருவாக்கி பயன் பெறலாம்.

பார்க்க http://www.ispendin.com

முயற்சி செய்துதான் பாருங்களேன்....!

விரும்பினால் பிறரும் பயன்பெற ஏதுவாக...
உங்களின் வலைப்பூவில் இந்த தளத்தின் Banner போட்டு வையுங்களேன