இந்தியா ஒளிருமா ?!
விவசாயி வீட்டில் ரூ.77 லட்சம் கொள்ளை
பெரியகுளம் அருகே விவசாயி வீட்டில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.77.10 லட்சத்தை திங்கள்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸôர் ஒப்படைத்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்ராஜ். இவரது மகள் சாந்தி (17). இவர் பெரியகுளத்தில் தனியார் பயிற்சிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
சாந்தியும், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த பரமசிவம் மகன் கார்த்திக்கும் (27) நீண்ட நாளாக பழகி வந்துள்ளனர்.
சாந்தியின் மாமா அசோக்குமார் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் இப் பகுதியில் நிலம் வாங்குவதற்காக தன்னுடைய மாமனார் பொன்ராஜிடம் ரூ.78 லட்சத்தைக் கொடுத்து வைத்திருந்தாராம்.
அதில் செலவு போக மீதி ரூ.77.10 லட்சம் பொன்ராஜ் வீட்டில் இருந்தது. இந்தப் பணம் வீட்டில் உள்ள விவரத்தை கார்த்திக்கிடம் சாந்தி கூறியுள்ளார்.
இப் பணத்தை அபகரிக்க கார்த்திக் திட்டமிட்டார். வீட்டில் உள்ள பணம் குறித்து வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவர். எனவே, இப் பணத்தை பத்திரமான இடத்தில் வைக்க வேண்டும் என சாந்தியிடம் கார்த்திக் கூறினார்.
சாந்தி மூலம் அவரது தந்தை பொன்ராஜை பெரியகுளத்திற்கு வரவழைத்து இவ் விவரத்தை கார்த்திக் கூறியுள்ளார்.
இதை நம்பிய பொன்ராஜ், தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து, வீட்டிலுள்ள பணத்தை காரில் வரும் சாந்தி மற்றும் கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பும்படி கூறினார்.
வீட்டில் இருந்த ரூ.77.10 லட்சத்தை பெட்டியில் வைத்து பொன்ராஜின் மனைவி ரெஜினா கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திக் பெரியகுளம் வரும் வழியில் காரில் இருந்த சாந்தியை இறக்கிவிட்டு காருடன் தப்பிவிட்டார்.
இது குறித்து பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் டி.எஸ்.பி. சிங்காரவேலு தலைமையில் இரு தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டனர். கார்த்திக்கை போலீஸôர் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.77.10 லட்சத்தைக் கைப்பற்றினர்.
இச் சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்குமார் (23), அன்பு (21), பாஸ்கரன் (26), பெருமாள் (25) ஆகிய 4 பேரையும் போலீஸôர் கைது செய்தனர்.
இந் நிலையில், போலீஸôர் கைப்பற்றிய பணம் ரூ.77.10 லட்சம் பெரியகுளம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இப் பணம் பெரியகுளம் கருவூல அலுவலகத்தில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.