தொலைக்காட்சியில்
ஒரு தாயானவள் வயிற்றிலடித்தபடி ஓலமிட்டதும்,
குடல்கள் தொங்கியபடி
ரத்தம் தோய்ந்த வாலிபனையும்
பல கோணங்களில் காட்டி விட்டு,
நிலத்தகராறு என்று
செய்தியை விரிவாய்ப் படித்தார்கள்.
செய்தி வாசித்தவள் சிரித்தபடி
வணக்கம் சொல்லிப் போய்விட்டாள்.
நான் மொய்க்கும் ஈக்களை
எதனால் துரத்துவது
என்று அறியாமல்,
அந்தத் தாய்க்குத் தோள்தந்தபடி
அங்கேயே நிற்கிறேன்.